யமுனா வீடு-36

- Advertisement -

சோர்வாக இருக்கிறேன்
மனம் எதையோ தேடிக்கொண்டிருக்கிறது
இந்த இரவைத்
தொட்டுச் செல்லும்
உன்னை நினைத்தால்
உண்மையில் பலமடைவேன்
முகம் பார்க்க வேண்டும்
சுணக்கமாக இருக்கிறேனா
எனக்குள்ளே பேசிக்கொண்டேன்
யாரும் கவனித்திருக்கவில்லை
கண்டும் காணாமலும்
கடந்து செல்லும்
மனிதர்களை அழைத்து
என்ன உரையாடிடமுடியும்
ஒரு தேநீரைக் குடித்து முடித்திருக்கலாம்
ஒரு பாடலைக் கேட்டிருப்பேன்
தேடிக்கொண்டிருக்கும் மனம் நோக்கி
யார்மீதும் வன்மம் இல்லாத
பெரும் கருணையோடு
ஒரு பறவை வரக்கூடும்
ஒரு பூனை வரக்கூடும்
மெய்மறந்த அன்பில்
தலைவருடப் பறந்திடுவேன்
தலைகோதத் தாவிடுவேன்
அலை மோதித் திரும்ப
உன்னைக் கவனமீர்க்கவே
இப்படி அலைந்து திரிந்த
ஒரு கனவின்
நினைவு வருகிறது யமுனா
நேசத்தின் கரம் நீட்டுகிறாய்
பற்றிக்கொண்டு உறங்கிப்போகிறேன்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -