யமுனா வீடு – 28

தொடர் கவிதை

- Advertisement -

மௌனமாகத் தனித்திருக்கும்
எல்லோருக்குள்ளும் வெறுமை இருக்கிறது
யமுனாவின்
உரையாடலில்
ஒவ்வொரு கதையாக சொல்ல கேட்டுக்கொண்டிருந்தேன்
இரவும் பகலும் மாறிக்கொண்டே இருக்க
திசைகளற்ற இந்த வாழ்வில்
யாரோ ஒருவருடை பிரியமிருக்கும்
வாடாத முகம் பார்த்தேன்
ஆகாசம் தொடும் மகிழ்வு அவளிடம்
அவளோடு சேர்ந்து தேநீர் அருந்த வேண்டும்
அன்பிற்காக காத்திருக்கும்
அவளின் கண்ணீர் அறியாத
அவளின் வலி அறியாத
ஒரு மழைக்காலத்தில்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -