யமுனா வீடு – 81

தொடர் கவிதை

- Advertisement -

பாவம்தான் நீ
என்னை அறியும்
பக்குவமென நினைத்தே
திரும்பி நிற்கிறேன்

நிகரற்ற அன்பை
கொடுக்கத்தெரியவில்லை
இறையன்பில்
அழுது தீர்க்கிறேன்

பிரிவாற்றாமையை
தூரமாக நின்று பார்க்கிறேன்
இன்னும் அழுத்தமாக
அழுது தீர்க்கிறேன்

விலகி நிற்பது
நீ + நான்
நினைப்பதுபோல இல்லை
இன்னும் ஆழமாகட்டும்

உன்னை உணரும்
ஒரு சந்தர்ப்பம்
இது ஒரு
விளையாட்டாக இருக்கலாம்

இந்தப் போதையில்
கவனமாக இருக்கிறேன்

யமுனா
தாங்கும் வல்லமையை
நீதானே தருகிறாய்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -