யமுனாவீடு 57

தொடர் கவிதைகள்

- Advertisement -

அரவமற்ற நள்ளிரவில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
பழக்கமாகிவிட்டது

நிகழ்ந்த ஒன்றை
கலைத்துப்போடுகிறேன்
கற்றுக்கொள்ள வேண்டும்

கண்ணுக்கெட்டியதூரம்வரை
கடல்தெரிகிறதென்று
எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியாது

கடைசியாக ஒரு சொல்
கதையை முடித்துவிடலாம்
பத்திரிக்கையில் இடம்பெறாத செய்தியாக இருக்கட்டும்

ஏதோஒரு நாளில்
மகிழ்ச்சியாக இருந்தேன்
கனவுகளைப் பற்றிச்சொல்கிறேன்

பெருவனத்துக்காளி பார்க்க
விழிகளில் திரண்டநீர்
உனக்கானது
கண்டடைவது எனக்கானது

நேசம் உயர முத்தமிடுகிறேன்
யமுனா
உன்னுடைய நினைவிலிருப்பவன்
மனம்பிறழக்கூடாது.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -