மாமழையே

கவிதை

- Advertisement -

அனல் பறக்கும் நிலத்தில்

என் குழந்தையின் கண்ணீர்

ஆவியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

சமாளிப்பதற்கு வழி தேடுகிறேன்.

வறண்டு கிடக்கும்

நிலத்துண்டைக் குழைத்து

பொம்மையாக்க வேண்டும்.

முரண்டுபிடிக்காமல் நீ வருவாயா மழையே…

**********

விலகிச் சென்றாலும்

தேடி வந்து நனைக்கும்

மழைச் சாரல் நீ.

விலகுவதற்கு மாறாக

நனைந்து பார்க்கிறேன்.

வெம்மையின் கொடுமையில்

காய்வதைக் காட்டிலும்

கூதளில் நடுங்கிக் கிடப்பதை

சொன்னால் புரியாது

வா சேர்ந்து நனைவோம்!

***********

மழைப் பொழுதொன்றில்

சாளரத்திற்குள்ளே நான்.

கண்ணாடியில் வழியும் நீர்த்துளியாய் நீ.

கலங்காமல் காத்திரு

அடுத்த நிறுத்தம் வரைதானே

இப்பேருந்து

நம்மைப் பிரிக்க முடியும்!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -