பெருநகர் கனவுகள் – 19

சாபங்களின் ஆயுள்

- Advertisement -

சாபங்களின் ஆயுள்

வீட்டுக்குள் வந்தமர்ந்து
கேள்விகள் பல கேட்டுப்
பின்னர் முடிவு செய்கிறார்கள்
என்ன சொல்லலாம் என.

வீட்டிலுள்ள பெண்கள் ஆண்கள்
குழந்தைகள் வருமானம்
கடன்கள் எதிர்காலத் திட்டங்கள்
வயதானவர்களின் மரணம்
கல்வி அறிவு
பொழுதுபோக்குகள்
என நீளும் அவர்களின்
விசாரணையின் இறுதியில்
எங்களுக்கான சொற்கள்
தயார்ப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

எல்லாமும் கேட்டோய்ந்த பின்பும்
அவர்களின் கண்கள்
எங்களின் மீது மேய்கின்றன.
போதாமையின் தேம்பல்
அவர்களின் உதடுகளில்
துடித்துக் கொண்டிருந்தன.

எப்படியிருப்பினும்
அவர்கள் தயார் செய்து வைத்திருந்த
சாபத்தின் அடுக்குகளை
ஒவ்வொன்றாகக் கட்டவிழ்த்துவிடுவார்கள்.

வீட்டிலுள்ள அனைவரும்
கைகளைக் கோர்த்து
வட்டமாக நின்றுகொண்டு
சாபங்களைப் பெறத்
தயாரானோம்.

-கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -