சகடக் கவிதைகள் – 5

- Advertisement -

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வீழ்வதென்றாலும் மகிழ்ச்சியாய்
ஏற்கிறது காற்றில்
அசைந்தாடும் இறகு

————————————————————

பிரபஞ்சத்தின் ஓர்
துளி நான்
என்னுள் பார்க்கிறேன்
ஓர் பிரபஞ்சம்

————————————————————

கடிகாரத்தின் முற்கள்
மரணத்தை நோக்கி
நகர்கின்றன.

————————————————————

கண்ணாடியில் அழிவில்
இருக்கிறது உன்
பிம்பத்தின் வாழ்நாள்

————————————————————

இடியப் போகிறது என்று
தெரிந்தாலும் கடற்கரையில்
கட்டப்பட்டுக்கொண்டுதான்
இருக்கின்றன மணல் வீடுகள்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -