சகடக் கவிதைகள் – 34

மேன்மக்கள்

- Advertisement -

மேன்மக்கள்

சுவரொட்டிகள் இல்லை
தோரணங்கள் தேவையில்லை
இருக்கும் இடத்தில்
இருந்தபடியே இழுக்கும்

தோன்றியதை அறிவிக்க
முரசடித்ததில்லை
நிகழ்வதே தெரியாதபடி
நிசப்தத்தில் சுரக்கும்

வாசத்தை மட்டுமே
விலாசமாய்க் கொண்டு
தன் இருப்பை
விசாலமாக்கிக் கொள்ளும்

கொள்வார்களைப் பற்றிய
கவலைகளற்று
காற்றோடு கைகோர்த்து
காதல் கொள்ளும்

வண்டு வரும் காலம்
பிரிவை எண்ணாமல்
ராணியைப் போல்
ஏறி அமர்ந்து
வானில் பறந்து செல்லும்

எங்கோ ஒரு மூலையில்
எவருக்கும் தெரியாமல்
எளிதாக எட்டாமல்
தேனடையாய் தனித்திருந்தாலும்
தேடித் தேடி வருகிறார்கள்

பூவின் மடியோ
பாறையின் இடுக்கோ
புழுதித் தரையோ
பிடிபடா உயரமோ

எதுவாகிலும் நிர்ணயித்திடுமோ
என்றும் மாறாத
தேனின் குணத்தை?

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -