காளை

கவிதை

- Advertisement -

கூரிய கொம்புகள் பளபளக்க …
லாடம் பதித்த கால்களின்
சலங்கை சலசலக்க….
சீறிப்பாய்ந்ததால் புழுதியெல்லாம் கமகமக்க….
கூடி நிற்கும் கூட்டமெல்லாம் கிசுகிசுக்க….
இன்றே களம் இறங்குபவர்கள் கிறுகிறுக்க….
இதோ! மீசையைத் தடவி தொடைகளைத் தட்டி
காலையில் நடந்த வீரவிளையாட்டில்
பாய்ந்து வந்த காளையை அடக்கிய
இளங்காளையொன்று அடங்கப்போகிறதே ….

அதோ!புருவம் உயர்த்தி வியந்து நோக்கும்
அந்த மஞ்சள் தாவணியணிந்து
மல்லிகை மணம் சூழ
கைகளை மட்டும் நிறுத்தாமல்
தட்டிக்கொண்டே சிலையாகிய
அந்த மெழுகு சிலையிடம்!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -