கனக்கும் பிரிவின் கணங்கள்

கவிதை

- Advertisement -

அன்பின் துகள்களாலான கோட்டையில்
சிதறும் நம் மகிழ்ச்சிக் கற்றைகளுக்கு
மத்தியிலும் நிசப்தமாய் உறங்கும்
அன்றில் பறவைகளின் உண்மை நிமிடங்கள்!

சட்டென புகுந்த காட்டுப் பூனையால்
நீயும் நானும் வெவ்வேறு திசையினில்
பொத்தான்களில் எனது கார்குழலை நீயும்
உனது பிடியில் நெளியும் வளையல்களை நானும்
தேடியலைந்து கண்ணீர் வடிக்கிறோம்.
அல்லும் பகலும் நடுநிசியிலும்கூட
உறக்கமின்றி அல்லாடுகின்றன
நம் நினைவின் பறவைகள்!

நம் உள்ளங்கையையும் சேர்த்து
ருசித்துத் தீர்க்கின்றன வீம்புப் பூச்சிகள்.
கைகளை மெல்லத் திறந்து
உள்ளிருக்கும் சமாதான அரிசியை
அல்லாடும் பட்சிகளுக்கு இரையாக்கி…
அப்பறவைகளுக்கும் நம் மனங்களுக்குமான
பேரமைதிக் கொடியை நாட்டுவதற்காக
சமரெனும் குன்றிலிருந்து
சமரச மலைக்கேறுவோம் வா!

Previous article
Next article
தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -