யமுனா வீடு – 15

தொடர் கவிதை - 15

- Advertisement -

நூலகத்திலிருந்து தருவிக்கப்பட்ட புத்தகங்களில்
மடித்து வைக்கப்பட்ட பக்கங்கள்
அடிக்கோடிட்ட வரிகளுமாக இருந்தது
யாருக்கான சொற்களாக இருக்கக் கூடும்
எதை சொல்ல அடையாளப்படுத்தப்பட்டன
கதையாடலின் குறிப்பும்
கவிதைக்கான குறிப்பும்
ஒன்றைப் போலவே இருக்கும் – இந்த குறிப்பு
எனக்கு உணர்த்த வருவது என்ன
இங்கு அடிக் குறிப்பிடப்பட்டுள்ள வாசிப்பிற்கான காத்திருப்பு
ஒரு பூனைக் குட்டியின் சினேகத்தை பெறுவதாகும்
பூனைக் குட்டியின் சினேகத்தை பெறுவதும்
இந்த வாசிப்பிற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை
தீராத பக்கங்களை கடந்து செல்வதும்
பூனைக் குட்டியின் சினேகத்தை பெறுவதும்
ஏனோ ஞாபகப்படுத்துகிறது
யமுனாவின் வீட்டை கண்டடைய
ஒரு பறவையின் பறத்தலின் தூரம்தான்
யமுனாவின் வீட்டை கண்டடைதல்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -