யமுனா வீடு – 24

தொடர் கவிதை

- Advertisement -

முதலாவது புன்னகை
பிறகொரு நலம் விசாரிப்பு
அன்பின் வெளிப்பாடு
கண்ணீர் பெருக்கெடுக்கும்
இந்தப் பெருவெளியில்
அதன் அர்த்தம் அறிந்தவனாய்
பிரபஞ்சத்தின் தேடலில்
கடல் நோக்கி
மனம் திறந்து நின்றேன்
ஓயத அலைகள்
காலடி தொட்டு உடைத்துப் பெருக்கடுக்க
நிலையற்ற வாழ்வின் கடந்துபோகும் காலம் ஒன்றில்
எனக்குள் விழும்
நீர்மை யமுனா
அன்பே யமுனா

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -