யமுனா வீடு – 20

தொடர் கவிதை -20

- Advertisement -

ஒரு தேநீரை அருந்தியபடி பேசிக்கொண்டிருந்த இருவர்

வெவ்வேறு இடங்களில்
அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த வெவ்வேறு நபர்கள்

பணியிடத் தொழிலாளர்களின் சிறு சிறு உரையாடல்கள்

உலகமெங்கும் யாரோ ஒருவர்
யாருக்காகவோ உடைத்து பேசிக்கொண்டிருந்த இரவில்

தோற்கடிக்கப்பட்ட பொழுதுகளை கடந்த
யமுனா மௌனத்தோடு இருந்தாள்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -