யமுனா வீடு – 17

தொடர் கவிதை - 17

- Advertisement -

தென்றலிடமும்
சமரிக் குட்டியிடமும்
வாசு
யமுனாவின் கதைகளை சொல்லத் தொடங்கினான்
ஒவ்வொரு கதையையும்
புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்த
சமரிக் குட்டி
கதையின் முடிவினில்
யம்னா க்கா க்கா என்றாள்
தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டிருந்த
4-ம் வகுப்பு படிக்கும் தென்றலுக்கு
சித்திரக் கதைகளின் சுவாரஸ்யம் இல்லையென்றும்
கீரிச் என சப்தம் எழுப்பும்
யமுனா வீட்டின் பச்சைநிற கேட்டை எப்போது பார்க்கலாம் என்றால்
யமுனாவின் கதை
தென்றலிடமிருந்து ஆரம்பிக்கிறது.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -