யமுனாவீடு – 94

தொடர் கவிதை

- Advertisement -

ஒருவனைத் துண்டித்துவிடுவதற்கு
செருப்பைக் கொண்டு அடிக்கத்தேவையில்லை
அழுத்தமான சொற்கள்போதும்
தனித்தலையட்டும் அவனுக்குள்

உணரும் வலிகளை
ஒருபோதும் நீ பகிராதே
உன் நிதானம்
மௌனமாக இருப்பதே
வீற்றிருக்கும் தெய்வங்கள் எல்லோருக்குமானது

எத்தனை இரவுகளைக் கடந்திருப்பாய்
காதலுமில்லாத
தாய்மையுமில்லாத
இந்தப்பகல் உனக்குப் புதிதுதான்
நிற்கத்தெரியாது துடிக்குமிதயத்திற்கு
அண்ணாந்து வானம் பார்த்து
நடக்கத்தொடங்கிவிடு

வாழும் காலத்தில்
யாரும், யாரையும் அறிவதில்லை
எதனொன்றிலும் ஆழ்ந்துவிடுவதில்லை
மெல்லக்கண்களை மூடுகிறேன்
அறிவது ஒரு தியானநிலை

திக்கற்றவனுக்கு தெய்வம்தானே துணை
எதுவும் பேசாமல் உன்னிடத்தில் மண்டியிடுகிறேன் யமுனா
உனக்குக் கொடுக்கும் என் கைகள்
சின்னஞ் சிறிதாகிவிடுகின்றன.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -