யமுனாவீடு -93

தொடர் கவிதை

- Advertisement -

உன்னைப் பார்க்கிறேன்
இந்தப்பிரபஞ்சம் சிறியதாகத் தெரிகிறது
நடக்கத் தொடங்கிவிடுகிறேன்

ஒவ்வொருநாளும் இப்படித்தான்
ஆகாயத்தைக் கடந்தவன்
நீண்ட சாலையக் கடந்தவன்
உயர்ந்தக் கட்டடங்களைக் கடந்தவனாக
பிரமாண்டமாக நடந்துகொண்டிருக்கிறேன்

இங்கு யாரும்
பறவையாவதில்லை
உனக்கிருக்கும் ஒரே வாழ்க்கையை
நடந்துதான் கடக்கிறாய்
பசிக்கும்போது உன்னைச்சுற்றும்
பறவையைப் பார்க்காதே

திரும்பத் திரும்பப்
பறவைகள் உன்னைச்சுற்றும்
உனக்கானதொரு வெளிச்சம்தேடி
மிகவும் நிதானமாக
எழுந்துபோய்விடு

உன்னுடையத் தடத்தில
உரத்துப்பேசும்
யாரேனும் நடந்துவரலாம்
வேண்டுதலோடு இரு
நேரம் அமையும்போது
எழுந்து நீ நடனமாடலாம்

இருள் திறக்கும்
மெழுகுவர்த்தியை ஏற்றிவை
வெளிச்சம் பரவியதும்
முகங்கள் காணத்தொடங்கலாம்
ஒரு முகம் யமுனாவை
நீ பார்த்துக்கொண்டிருப்பது
ஆறுதலாய் இருக்கும்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -