புலம்பும் ஓவியம்

கவிதை

- Advertisement -

கூரான வார்த்தையில் தீட்டிய வாளால்
கரகரவென என் குரல்வளையை அறுக்கிறாய்.
ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து
உறைந்தே போய்விட்டது.

தலையும் முண்டமும் சம்மந்தமற்றுப் போனாலும்
இன்னும் விழி வழியாய்க் கண்ணீர்
உறைந்த ரத்தத்தில் பாய்கிறது.

இதோ அப்பெருவெளி
கண்ணாடியாய் விரிகிறது.
அதில் பாழாய்ப்போன
அவ்வாளையேந்திய
தொன்ம ஓவியமொன்று
‘வார்த்தையின் வலிமையறியாத மூடனாகிவிட்டேனே’ என
பரிதவித்துப் புலம்புகிறது.

அதன் கண்ணீர்த்துளி ஒரு கல்லாகி
ஆணவம் பிடித்த அவ்வோவியத்தைக்
கலங்கடிக்கிறது!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -