ஆயத்தம்

கவிதை

- Advertisement -

வசந்தகாலமொன்றில்
பனித்துளியோடு மலர்க்கொத்தொன்று
என் கரங்களில் வீழ்ந்தது.
மகிழ்ச்சி இதழ்கள் உதிர்ந்த பாதையில்
பயணமென்ற போதிலும்
ஆங்காங்கே சிறுசிறு கற்கள் குத்துகின்றன.
சில கண்ணாடித் துகள்களும்கூட
நெருஞ்சி முட்களை பிடுங்க வேண்டியுள்ளது.
எப்படியோ மழைக்கு ஒதுங்கினாலும்
சேறு சகதிக்குள் புரள வேண்டியுள்ளது.
பள்ளம் மேடுகளில் கவனம் கொள்ளவேண்டியுள்ளது.

இந்தப் பயணத்தின் பாதையில்
இன்னும் எவ்வளவோவென்று
தலைசுற்றும் வேளையில்
பாலைவனமொன்றில் நாவறண்டு கிடக்கிறேன்.
இப்போது அழத்தான் முடியுமா?
வந்தவழியே திரும்பத்தான் முடியுமா?
தெளிவற்ற பார்வையில் விளங்கவேயில்லை.
விழிகளைத் தேய்த்துப் பார்த்தால்
நீர்க்குப்பியோடு பூங்கொத்தையும் கொடுத்து வரவேற்கிறது
ஓர் ஒட்டகம்…

நானும் அடுத்த கட்டத்தை நோக்கி
ஆயத்தமாகிவிடடேன்!!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -