மின்கிறுக்கல்

யமுனா வீடு

PC: ஓவியர் துரையெழிலன்

ஒரு நெடியநாளின் சிறுதுயரை
கடந்து வருவதில்
யாரிடம் கதை கேட்டு
யாரிடம் கதை சொல்வது
என்ற குழப்பத்தில்
அழத்தொடங்கும் யமுனாவிற்கு
சமாதானம் தேவைப்படுகிறது
அம்மாச்சியின் முகம் பார்க்கிறாள்
அப்பாவின் முகம் பார்க்கிறாள்
அம்மாவின் முகம் பார்க்கிறாள்
சமாதானத்திற்கான புன்முறுவலை
யார் தருகிறார்களோ
அவர்களைப் பற்றிக்கொண்டு
சமாதானம் அடைகிறாள்
சமாதானம் அடையும் யமுனாவிற்கு
ஒரு நெடியநாள் இன்றோடு முடியாது
நாளைய பொழுதில் ஆரம்பமாகும் – என்று
தெரிந்தே இருக்கிறது.

Exit mobile version