மின்கிறுக்கல்

வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022

அன்பு வாசகர்களே,

இன்று மின்கிறுக்கல் மின்னிதழ் தன்னுடைய இரண்டு ஆண்டுப் பயணத்தை இனிதே நிறைவு செய்துகொண்டு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இணையம் முழுவதும் வலைப்பதிவுகளும் பின்னூட்டங்களும் நிறைந்திருக்கும் காலகட்டத்தில் தனக்கே உரிய பல்சுவைப் பதிவுகளை வெளியிடுவதில் மின்கிறுக்கல் தனக்குரிய இடத்தை பிடித்துவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது. இந்தப் பெருமை அனைத்தும் வாசகர்களாகிய உங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மட்டுமே உரித்தானது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட தரமான பல்சுவைப் பதிவுகள் நமது வலைப்பக்கத்தில் வந்துள்ளன. கடந்த ஆண்டு மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாகக் கட்டுரைப் போட்டியை அறிவித்து மாணவர்களை ஊக்கப்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நல்ல வேளையில் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்த்த அனைத்து சங்கக் கால வரலாற்று ஆசிரியர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக ஒரு புதுவிதமான போட்டியை அறிவிக்கிறோம்.

வரலாற்றுப் பின்னணி கொண்ட எந்த ஒரு நிகழ்வையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டு தங்களுடைய கற்பனையைக் கலந்து சிறுகதை புனைய விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

போட்டியின் விதிமுறைகள் பின்வருமாறு:

“இக்கதையை போட்டி முடிவு வெளியாகும் வரை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்ப மாட்டேன்.

இது ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்றும் உறுதிளிக்கிறேன்.

மேலும் இந்தப் படைப்பானது எனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியையும் அளிக்கிறேன்.”

உங்கள் கற்பனைக் குதிரை ஓட ஆரம்பிக்கட்டும். எழுத ஆரம்பித்து விட்டீர்கள் தானே???! 

– ஆசிரியர், மின்கிறுக்கல் மின்னிதழ்
மின்னஞ்சல் : editor@minkirukkal.com
https://minkirukkal.com/

Exit mobile version