மின்கிறுக்கல்

யமுனாவீடு – 69

எங்கிருந்து பார்த்தாலும்
நாம் இருவரும்
வெவ்வேறானவர்கள்.

இங்கு ஒருவரும்
தண்டிப்பதில்லை
அவரவர் கற்பித்துக்கொண்டது

நம்முடைய வாழ்க்கை
ஒரு பொழுதில்
யாரிடமோ பந்தயம் கட்டுகிறோம்

ரோட்டில் இறங்கி நடந்துபாருங்கள்
தொட்டுவிடும் தூரமில்லை
கிளைக்கும் பாதையில் தொலைந்துபோகவேண்டும்

கை நீட்டி யாரவது அழைக்கலாம்
ஏமாற்றமில்லை
ஒரு தேநீரை பகிர்ந்து குடிக்கலாம்

மழையில் நனைந்து செல்
முவடிவற்றதொரு நாளில்
ஒரு அற்புதம் நிகழலாம்

யமுனாவின் புன்னகை உனக்குள்ளிருக்கும்
மனதுக்குள் பறக்க
ஆரம்பித்திருப்பாய்

Exit mobile version