மின்கிறுக்கல்

குழந்தைப் பாடல்கள்

பூமி

அழகு மிக்க பூமியே
இயற்கை சூழ்ந்த கோளமே
உயிர்கள் வாழும் உலகிது
பூக்கள் மலரும் இடமிது

மரங்கள், ஆறுகள் கொண்டதால்,
பச்சை,நீலம் ஆனதே
சந்திரன் உற்ற தோழனாம்
மூன்றாம் கோள் ஆனதாம்.

ஓவியர்: அனுமிதா

பழம்

இனிப்பு மிக்க பழமிது
இயற்கை தந்த பரிசிது
நாக்கில் பட்டால் கரையுமாம்
வண்ண நிறம் ஆகுமாம்

பட்சி உண்ணும் பழமிது
உண்ண உண்ண இனிக்குமாம்
சக்தி தரும் கனியிது
காற்றில் ஆடி அசையுமாம்.

ஓவியர்: அனுமிதா
Exit mobile version