வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்
பாழ்நிலத்தின் அடர் இருளாய் கிடக்கிறது
கதியற்றவனின் பசி!!
பசியாற்ற நினைப்பவனின் உடலிலோ
ஏழ்மையின் முழு ஆடைகள்!!
பூதலத்தின் மடியில் தூங்கும் பல
உயிர்களுக்கு . . .
தங்கள் இளம்பசியை தீர்க்க கூட இங்கு வழியில்லை!!
திருவோடில் பிற உயிர்களுக்கு பாலூற்றுகிறவன்
பசி மறக்க மருந்து கேட்கிறான்!!
பசி எடுக்க மருந்து கேட்பவன், வயிற்றுக்காக பழத்தை திருடியவனிடம் இருந்து அதை பறித்து மகிழ்கிறான்!!
எரியும் தீபத்தை விட அணையும் ஜோதி அதிக ஒளியை நம்முள் பரவ விடுவதைப் போல் . . .
இருப்பவனை விட இல்லாதவன் ஆற்றும் பசி
நம் மனதிற்குள் நிறைகிறது ஒளிச் சந்தியாய்!!
வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்!!!
வறியவனின் சிவந்த கைகளைக் கண்டு!!