மின்கிறுக்கல்

யாருக்காக நிற்கிறாய்?

இரவு ஆரம்பித்தபோது 

மதிலில் நிற்க ஆரம்பித்தாய்

யாரைக் காண?

அதிகாலை மூன்று மணியளவில்

உன் அழகை படம் பிடித்தேன்

அப்போதும் நீயென்னை திரும்பி பார்க்கவில்லை

உன் பார்வைக்காக நான் விழித்திருக்க

உன் நிழல் கூட என் மீது விழவில்லை என்பதால் 

அந்த ஏக்கத்தில் நிழற்படம் எடுத்தேன்

இன்றும் அதிகாலை உனைக் காண்பேன்

அப்போதாவது சொல்  யாருக்காக நிற்கிறாய் என்று?

அழகிய புறாவே !!

Exit mobile version