மின்கிறுக்கல்

யமுனா வீடு – 21

குழந்தையின் ஒளிநிறைந்த
கருணை முகம் யமுனாவிற்கு

கசடு நீங்க பிரார்த்தனை செய்யும்
வழி தொலைத்த
ஒருவனின் கனவில் வந்து சொல்கிறாள்
ஒற்றைப்பிரியத்தின் ஜனன கதை ஒன்றை

கதையும் உரையாடலும்
அவனை குற்றவுணர்சிக்கு இட்டுச்செல்ல
உரையாடலில் அவனது உணர்வுகளை கிளறிவிட்டு
அவள் உடைந்துவிடுகிறாள்.

அவனின் தலைகோதி கண்களில் முத்தமிட்ட யமுனா
தொட்டுணரமுடியாதவள்

பிறகு, பார்த்துச் சிரித்த யமுனா
அன்பெனும் கடலாய்
அவனை அரவணைத்து உறங்கிப்போகிறாள்.

விழித்து எழுந்தவன்
ஒரு குவளை தண்ணீரை பருகிவிட்டு
யமுனா வந்த கனவில் படுத்து உறங்கிப்போகிறான்.

Exit mobile version