மின்கிறுக்கல்

யமுனா வீடு – 20

PC: ஓவியர் துரையெழிலன்

ஒரு தேநீரை அருந்தியபடி பேசிக்கொண்டிருந்த இருவர்

வெவ்வேறு இடங்களில்
அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த வெவ்வேறு நபர்கள்

பணியிடத் தொழிலாளர்களின் சிறு சிறு உரையாடல்கள்

உலகமெங்கும் யாரோ ஒருவர்
யாருக்காகவோ உடைத்து பேசிக்கொண்டிருந்த இரவில்

தோற்கடிக்கப்பட்ட பொழுதுகளை கடந்த
யமுனா மௌனத்தோடு இருந்தாள்

Exit mobile version