மின்கிறுக்கல்

யமுனா வீடு – 17

PC: ஓவியர் துரையெழிலன்

தென்றலிடமும்
சமரிக் குட்டியிடமும்
வாசு
யமுனாவின் கதைகளை சொல்லத் தொடங்கினான்
ஒவ்வொரு கதையையும்
புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்த
சமரிக் குட்டி
கதையின் முடிவினில்
யம்னா க்கா க்கா என்றாள்
தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டிருந்த
4-ம் வகுப்பு படிக்கும் தென்றலுக்கு
சித்திரக் கதைகளின் சுவாரஸ்யம் இல்லையென்றும்
கீரிச் என சப்தம் எழுப்பும்
யமுனா வீட்டின் பச்சைநிற கேட்டை எப்போது பார்க்கலாம் என்றால்
யமுனாவின் கதை
தென்றலிடமிருந்து ஆரம்பிக்கிறது.

Exit mobile version