மின்கிறுக்கல்

யமுனா வீடு – 71

முகத்தோடு பேசிய மனிதர்களிடத்தில் தான்
எத்தனை மாயங்கள்

ஒவ்வொருவரும்
தனித்தனியானவர்கள்

தனியானவர்களும்
ஒரு கணத்தில்
காணமல் போய்விடுகிறார்கள்

மறு கணத்தில்
இறந்தவர்களாகி விடுகிறார்கள்

மரணித்தவர்களை
மன்னித்துவிடுகிறோம்

பிறகொருநாள்
தேநீர் கோப்பையோடு
உயிர்த்தெழுவார்கள்

நீங்கள் சிரிக்கவேண்டும்
சத்தம் போட்டு பேசவேண்டும்
இன்னொருமுறை கடக்கவேண்டும்

மறதியின் காரணமாக
இறந்தவர்களை
மன்னித்துவிடுகிறோம்

நாம் பார்ப்பெதெல்லாம்
அவரவர் சார்ந்த நலனெனும்போது
இங்கு உனக்கு நீ தான்

வாழும் கொஞ்ச காலம்
இந்த உலகத்தில்
எங்கு போகப்போகிறாய்?

போ போ
யமுனாவைத் தேடு.

Exit mobile version