மின்கிறுக்கல்

யமுனாவீடு -56

ஒரு பாதியில்தான் ஆரம்பிக்கிறது
இந்த நாளும்

கால்போன போக்கில்
பெரு நகரம் உருவாகிறது

மனிதர்கள் காணமல் போவது பற்றி
எனக்குத் தெரியும்
திரும்பவும் வருகிறது ஒரு கனவு

யாரோ ஒருவருக்கு பைத்தியம் பிடிக்கிறது
ஒருவர்தான் கருணையுடையவராக இருக்கிறார்

கீச்சொலிகள்
கேட்டுக்கொண்டே இருக்க
சில பறவைகளை வளர்க்க வேண்டும்

தீடிரென்றுதான் இப்படி நிகழும்
வேண்டுதலில்
உன்னைப்பாடுகிறேன்
என்னை ஏமாற்றி
எடுத்துக்கொள்கிறேன்

இடறிவிழுந்தபோது
கைதூக்கிவிட்ட
யாரும் நினைவிலிருப்பதில்லை

இந்த நிமிடத்தில்
கண்களை மூடிக்கொண்டேன்
அணையாத தீபமாய்
எங்கும் நீதான் யமுனா.

Exit mobile version