மின்கிறுக்கல்

பெருநகர் கனவுகள் – 16

மழைப்பொழுதும் சிகரெட் துண்டுகளும்

புகைத்துப்போட்ட சிகரெட் துண்டுகள்
ஓர் அழையாத மழைப்பொழுதில்
பொசுங்கி பொசுங்கி
எழுப்பும் சத்தத்தை
இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தீத்துகல்கள் இருள்வது
ஒரு மனவேட்கை
தீர்ந்து முடிவதாக
தோன்றும் கணங்களில்
தம்மைத் தாமே
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.

இன்னும் பல
நிறைவேறாத வேண்டுதல்களுக்கும்
கைக்கூடாத சந்திப்புகளுக்கும்
தீர்ந்திடாத துயரங்களுக்கும்
ஒரு மழைப்பொழுதும்
ஒரு பெட்டி சிகரெட் கட்டுகளும்
வேண்டுமெனத் தீர்மானித்துக் கொள்வார்கள்.

-கே.பாலமுருகன்

Exit mobile version