மின்கிறுக்கல்

புராணிக ஓவியம்

தேசம் முழுக்க

சுற்றி வந்திருக்கிறேன்

பல்வேறு மொழியாலான மனிதர்களோடு வாழ்ந்திருக்கிறேன். எல்லாக் கலாச்சாரமும் 

ஏதோ ஒரு இழையில் 

தொடர்பை இணைத்துக்கொண்டிருக்கின்றன

மனித வாழ்வின் 

தீராத கசப்பினூடாக

கனவுகளும் 

புனைவுகளும் 

கொண்டாட்டங்களும் கலந்தே பயணிக்கின்றன

நிலம் மனிதன் இடையேயுள்ள போராட்டம் 

கணிக்க முடியாததாக இருக்கிறது 

என இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே… 

எனக்கு தேச மனிதர்கள் 

கருணை வடிவானவர்கள்

ஆனால் வாழ்வின் தீராத தாகத்துடனே 

வாழ்ந்து மடிகிறார்கள்என்

அனுபவத்தில் இதன் நிலவரம்புக் கோடுகள்

அழிபட்டால் நன்றாக இருக்குமென்றே

தோன்றுகிறதுமற்றபடி இந்தியா 

ஒரு பூடகமாக படிமங்கள்

பெருக்கெடுக்கும் ஸ்தலம்.

Exit mobile version