மின்கிறுக்கல்

தனிமை

கைவிடப்பட்ட ஒற்றைச் செருப்பாய்
தனித்தலையும் இறகாய்
எரி நட்சத்திரமாய்
மனித வருகையற்ற
காட்டுக் கோவிலாய்
வவ்வால் புழுக்கைகள் மணக்கும்
இடிந்த கோட்டையாய்
துடுப்பற்ற படகாய்
புகை வண்டிக்காய் காத்திருக்கும்
புதிதாய் போடப்பட்டு
பயன்பாட்டிற்கு திறக்கப்படாத
தண்டவாளப் பாதையாய்
வற்றிய ஆற்றில்
மீன் தேடும் பசித்த கொக்காய்
உதிரும் இலைகளை
எண்ணியபடி இருக்கும் விருட்சமாய்
பரந்து விரிந்த மனவெளியில்
நித்தியத்துவ அழகியலைத் தேடி
பிராத்தனையை முன்னெடுத்துப்
பயணிக்கும்
ஆன்ம யாத்தரீகனாய்‌
நானும் உன்
காதலின் பெருங்கனவில்.

Exit mobile version