மின்கிறுக்கல்

வள்ளுவரை வியந்தேத்தும் அமெரிக்கத் தமிழர்

மனம் சார்ந்த வாழ்வில், இரு கிளைகளாய் வாழ்க்கை அமைகிறது.  பணம் தேடுவது என்பதாய் ஒரு கிளை வளர்கிறது. இன்னொரு பக்கம்  நிம்மதி மற்றும் மகிழ்ச்சியைத் தேடுவது என்பதாய் ஒரு கிளை வளர்கிறது. அவ்வகையில், இன்றைய சூழலில் உலகம் முழுவதிலும் மக்களின் பயணம் தொடர்வதில்  தமிழர்களின் பயணம் இதில் கொஞ்சம் மாறுபட்டதாகிறது.

தமது மனதின் மகிழ்ச்சிக்காகத் தாம் சார்ந்த மொழியின் வளத்தை மிகுப்பதில்  தமிழர்களுக்கு இணை தமிழர்கள் தான் எனுமளவிற்குத் தம் வாழ்வில் தமிழ்ப்பணி செய்ய முனைகின்றனர். அதைப் போன்றுத் தமிழ்ப்பணிகள் செய்தவர் தான் அமெரிக்காவில் வாழும் முனைவர் இர.பிரபாகரன். தேனீ போல் உழைத்துத் தமிழை உயர்த்தப் பாடுபட்டவர். அவரின் சீரிய பணிகள் குறித்துக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இளமையும், திறமையும்:

முனைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் மன்னார்குடியில் பிறந்தவர். இவர் தமிழ் நாட்டில்  கணிதத்துறையில் B.Sc, M.Sc ஆகிய பட்டங்கள் பெற்றார். சில ஆண்டுகள், தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றியபின், இவர் அமெரிக்காவில் கணினித்துறையில் M.S, Ph.D. மற்றும் MBA பட்டமும் பெற்றார். இவர் அமெரிக்காவில் தனியார் நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களின் மூலம், NASA, US Army ஆகிய நிறுவனங்களிலும் உயர்ந்த பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

இவர் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அறக்கட்டளையின் செயலராகவும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் துணைத்தலைவராகவும் பணிபுரிந்து, அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சிக்கும் தொண்டாற்றியவர்.

வாசிங்டன் வட்டாரத்தில் 2003 – ஆம் ஆண்டு, தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம் என்ற அமைப்பை நிறுவி, அதன் சார்பாகக் கடந்த பல ஆண்டுகளாகத் திருக்குறள், புறநானூறு, தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகாரம், குறுந்தொகை, நாலடியார், முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களைத் தானும் கற்று, நண்பர்களுக்கும் இவர் அவற்றைக் கற்பித்தார்.  இவர் தொடங்கிய அந்த அமைப்பு, அமெரிக்காவில், பல ஊர்களில் தமிழர்கள் கூடித் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியம் ஆகியவற்றைப் படிப்பதற்கு முன்மாதிரியாக இருந்துவருகிறது.

            மேலைநாடுகளில் முதன்முறையாக நடத்தப்பட்ட பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு, உலகின் முதல் பன்னாட்டுப் புறநானூறு மாநாடு, உலகின் முதல் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு ஆகிய மாநாடுகளுக்கு ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று, அவற்றை மிகவும் வெற்றிகரமாக இவர் நடத்தியுள்ளார்.

2019 – ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஒரு அமர்வுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ் நாட்டில் உள்ள, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம் என்ற அமைப்பின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளரகப் பணியாற்றிவருகிறார்.

கடந்த ஓராண்டு காலமாக, அமெரிக்கத் தமிழ் வானொலியில் “திருக்குறள் சிந்தனைகள்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்தச் சொற்பொழிவுகளை வலையொளியில் (வலையொளி – YouTube) காண முடியும். மேலும், மாதம்தோறும், “புறநானூற்றுப் பூங்காவிலிருந்து சில பூக்கள்” என்ற தலைப்பில், புறநானூற்றில் உள்ள கருத்துக்களைத் தொகுத்துத் தொடர்ச் சொற்பொழிவாற்றிவருகிறார். இந்தச் சொற்பொழிவுகளை வலையொளியில் காணலாம்.

  இவருடைய வலைத்தளத்தில் உள்ள திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் “புதிய பார்வையில் திருக்குறள்” என்ற நூல் வடிவத்தில் வெளிவர உள்ளன.

தற்பொழுது, அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

முனைவர் பிரபாகரன் அவர்கள்,  திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களை மேலை நாடுகளில் பரப்புவதைத் தன் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இன்றுவரை அயராது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

முனைவர் இர.பிரபாகரன் அவர்கள் எழுதிய  நூல்கள்:

1.புறநானூறுமுலமும் எளிய உரையும்பகுதி1 (2012) Kaavya Publishers, Kodampakkam, Chennai 600 024

2.புறநானூறுமுலமும் எளியஉரையும்பகுதி2 (2013) Kaavya Publishers, Kodampakkam, Chennai 600 024

3.குறுந்தொகைமூலமும் எளியஉரையும் (2017) Kaavya Publishers, Kodampakkam, Chennai 600 024

4.The  Ageless Wisdom (As embodied in Thirukkural) (2019) Emerald Publishers,Chennai.

5. புதிய பார்வையில் திருக்குறள் – To be published by Emerald Publishers, Chennai in 2021

முனைவர் இர.பிரபாகரன் அவர்களால் தொகுக்கப்பட்ட  நூல்கள்:

          1. வள்ளுவர் முப்பால் – புதியபார்வைகள் (துணைபதிப்பாசிரியர்)

          2. ஆய்வுக் கோவை- ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுமன்றம், மதுரை – 2006

முனைவர் இர.பிரபாகரன் அவர்களின் வலைப்பூக்கள்:

https://amazingkural.blogspot.com          (Contains essays on Thirukkural in English)

            https://thirukkuralkatturaikal.blogspot.com (Contains essays on Thirukkural in Tamil)

https://puram1to69.blogspot.com            (Contains commentaries on Puranaanuuru poems 1 through 69)

https://puram400.blogspot.com               (Contains commentaries on Puranaanuuru poems 70 through 400)

https://nallakurunthokai.blogspot.com (Contains commentaries on all the 402 poems of

Kurunthokai )

https://mullaippaattu.blogspot.com (Contains commentaries on Mullaippaattu)

https://kurinjippaattu.blogspot.com (Contains commentaries on Kurinjippaattu)

தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதுடன், டாக்டர் பிரபாகரன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வலைப்பதிவுகள், புத்தகங்கள் மற்றும் விரிவுரைகள் மூலம் செம்மொழியான தமிழ் இலக்கியத்தை ஊக்குவித்து வருகிறார்.

திருக்குறள், புறநானூறு, குறுந்தொகை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு பற்றிய அவரது வலைப்பூக்கள் புலம்பெயர்ந்த தமிழ் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களால் தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, புறநானூறு பற்றிய அவரது வலைப்பதிவுகளை அமெரிக்கா, கனடா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பல நாடுகளில் 300,000க்கும் மேற்பட்ட வாசகர்கள் பார்வையிட்டு படிக்கின்றனர்.

பழங்கால இலக்கியங்களிலிருந்து சிக்கலான மற்றும் நுட்பமான கருத்துக்களை எளிமையான மற்றும் நேர்த்தியான பாணியில் வெளிப்படுத்தும் தனித்துவமான திறன் அவரின் பாணி என வாசகர்கள் கூறியிருக்கின்றனர்.

வானொலி மற்றும் ஆன்லைன் விரிவுரைகள்:

முனைவர் பிரபாகரன் அவர்கள் “திருக்குறள்சிந்தனைகள்” எனப்படும் திருக்குறள் பற்றிய தொடர் விரிவுரைகளை வழங்கி வருகிறார். இந்த விரிவுரைகள் அமெரிக்க தமிழ் வானொலியால் (www.americantamilradio.com) சனிக்கிழமைகளில் காலை 11:30 (கிழக்கு நேரம்) மற்றும் இரவு 10 மணிக்கு அமெரிக்காவில் ஒளிபரப்பப்படுகிறது  மற்றும் இந்தியாவில் இரவு 9:00 மணிக்கு. இந்த விரிவுரைகளில் பல யூடியூப்பில்  நேரலையாக வெளியிடப்பட்டன.

            ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமைகளில் புறநானூறு தொடர்பான தலைப்புகளில் ஆன்-லைன் மூலம் விரிவுரை செய்கிறார், இந்த விரிவுரைகள் YouTube இல் வெளியிடப்படுகின்றன.

விரிவுரைகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள்:

தொடர்சாதனைகளும் தமிழ்ப்பணியும் :

• அமைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக இருந்து, அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் கட்டுரைப் போட்டி  நடத்தி வருகிறார்

• செயலாளர், கல்விக்குழு, 10வது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் ஜூலை 2019 இல் நடைபெற்றது. மாநாட்டிற்கான சுருக்கங்களைத் தேர்ந்தெடுப்பதில் பங்கேற்றார். திருக்குறள் அமர்வு ஒன்றின் தலைவராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

• உறுப்பினர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை வெளியிட்ட மின்னணு இதழின் (மின்னிதழ்) ஆசிரியர் குழு.(2017 – 2019)

• நிறுவனர், வாஷிங்டன் DC பகுதியில் தமிழ் இலக்கிய ஆய்வு வட்டம் (தமிழ்இலக்கியஆய்வுக்கூட்டம்). இந்த அமைப்பு 2003 ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தின் ஆழமான ஆய்வை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது.

O Tamil Literary Study Circle (தமிழ்இலக்கியஆய்வுக்கூட்டம்) டெக்சாஸ், கலிபோர்னியா, இல்லினாய்ஸ், பென்சில்வேனியா மற்றும் வர்ஜீனியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் உள்ள தமிழ் இலக்கிய ஆய்வு வட்டங்களுக்கான மிகப்பெரும்  அடித்தளமாக இருந்தார்.

சர்வதேச திருக்குறள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக 2005, கொலம்பியா, மேரிலாண்ட், அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டு பணியாற்றினார். மேற்கத்திய நாடுகளில் இதுவே முதல் சர்வதேச திருக்குறள் மாநாடு. இந்த மாநாட்டில் டாக்டர் வா.செ.குழந்தைசாமி மற்றும் டாக்டர் ஜார்ஜ் ஹார்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, மேற்கத்திய நாடுகளில் முதல் முறையாக, அமெரிக்காவில் பொது இடத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.

இந்த மாநாடு அமெரிக்காவில் உள்ள தமிழ் சமூகத்தினரிடையே திருக்குறள் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதனால் அமெரிக்காவில் தமிழ் படிக்கும் மாணவர்கள் தற்போது திருக்குறள் பயின்று ஆண்டுதோறும் நாடு தழுவிய அளவில் நடைபெறும் திருக்குறள் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

• சில்வர் ஸ்பிரிங், மேரிலாந்தில், 2013 சர்வதேச புறநானூறு மாநாட்டிற்கு ஒருங்கிணைப்பாளராக ஒழுங்கமைக்கப்பட்டு பணியாற்றினார். புறநானூறு பற்றிய முதல் சர்வதேச மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

• அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ராக்வில்லில் 2017 ஆம் ஆண்டுக்கான சர்வதேச குறுந்தொகை மாநாட்டிற்கு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். உலகில் எங்கும் நடைபெற்ற குறுந்தொகை தொடர்பான முதல் சர்வதேச மாநாடு இதுவாகும். மேற்கத்திய நாடுகளில் குறுந்தொகை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதை மேம்படுத்துவதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

• அமெரிக்காவில் இலக்கிய தலைப்புகளில் பல பிராந்திய மற்றும் தேசிய தமிழ்ச் சங்கங்களின் வருடாந்திர மாநாடுகளில் பேச்சாளராக இவர் அழைக்கப்பட்டார்.

• பாரி மன்னருக்கும் கவிஞர் கபிலருக்கும் இடையிலான உறவை விவரிக்கும் புறநானூறு கவிதைகளின் அடிப்படையில் “பாரியின்கதை” என்ற நாடகத்தை உருவாக்கினார். கதை மற்றும் வசனம் எழுதினார்; கவிஞர் கபிலராக இயக்கி நடித்தார். இந்த நாடகம் அமெரிக்காவின் தென் கரோலினாவின் சார்லஸ்டன் மற்றும் வாஷிங்டன் டி.சி பகுதியில் வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA’s) 2011 ஆண்டு மாநாட்டில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டது.

தமிழ்ச் சமூகத்திற்கு ஆதரவானச் செயல்பாடுகள்:

 அங்கீகாரங்களும் விருதுகளும்:

• தமிழ் நோக்கங்களுக்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் விருது – வள்ளுவன் தமிழ் அகாடமி, ஃபேர்ஃபாக்ஸ், வர்ஜீனியா, அமெரிக்கா, மே 2017  இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

• ஆகஸ்ட் 2017 இல் அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ராக்வில்லில் நடைபெற்ற சர்வதேச குறுந்தொகை மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியதற்காக விருது இவருக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

• செம்மொழி தமிழ் இலக்கிய விவாதங்களுக்கான இலக்கியவட்டம் குழுவை நிறுவியதற்காகச் செம்மொழித் தமிழ் இலக்கிய விருது  இவருக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. – தமிழ்நாடு அறக்கட்டளை, Inc. 2016 இதனை வழங்கியது

• 2005 ஆம் ஆண்டு சர்வதேசத் திருக்குறள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகச் சிறந்த பங்களிப்பிற்கான இலக்கிய விருது இவருக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது – கிரேட்டர் வாஷிங்டன், Inc., 2007 தமிழ் சங்கத்தால் இது வழங்கப்பட்டது.

வான்வெளி வரைச் செழுந்தமிழ்  பரப்பிய  பெருமான்,  முனைவர் பிரபாகரன் அவர்கள் இவை போன்று பல்வேறு  தமிழ்ப்பணி இன்றும் செய்து கொண்டிருகின்றார் என்பதைத் தமிழுலகம் என்றும் மறந்து விடாது. அவரின் சீரிய தமிழ்ப் பணி  இன்னும் பலகாலம்  நடக்க, இறைவனின் ஆசிகள் அவருக்குக் கிடைக்கத் தமிழர்களாகிய நாம் வேண்டுவோமாக.

வளரட்டும் ஈடில்லாத் தமிழ்!!!

வாழட்டும் இரா. பிரபாகரன் புகழ்!!!

Exit mobile version