சொல்லாடும் முன்றில் – 2

- திங்கள் கூடுகை 2 , சிங்கப்பூர்

- Advertisement -

கவிதைப் போட்டிக்கான குறிப்புகள் பின்வருமாறு :-

இந்தப் புது நாகரிக உலகத்தின் மாற்றங்களுக்கிடையே பெண்கள் எவ்வாறு தங்களை உணர்கின்றனர்?

வரலாறு முழுவதும் காணப்படுகின்ற பெண்களின் தனித்திறமைகள் தலைமைப்பண்புகள் கல்விப்புலமை தன்விருப்பத் தேர்வுகள் போன்றவை யாரால் எப்படி எதற்காக ஓரங்கட்டப்பட்டன?

பெண்ணடிமை பெண்ணுரிமை பற்றிய புரிதலிலும், அவற்றுக்கிடையேயான இடைவெளியை நிரப்புவதிலும் இன்றைய பெண்களின் பங்களிப்பென்ன?

தற்காலக் கல்விமுறையும் வேலைவாய்ப்புகளும் பெண்களுக்கு அளித்திருக்கும் வாய்ப்புகள் போதுமானதாக இருக்கின்றவனா?

மேற்கூறிய நான்கு கேள்விகளுக்கான விடையாக உங்கள் கவிதைகளை நீங்கள் எழுதலாம்.

செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் கீழே குறிப்பிட்டிருக்கும் மின்னஞ்சலுக்கு உங்களின் கவிதையை அனுப்புங்கள் 🙏.

தொடர்பிற்கு
82377006

[email protected]

17.09.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை ஜூராங் மேற்கு நூலகத்தில் நடைபெறும் சொல்லாடும் முன்றில் முன்றில் 02 நிகழ்ச்சியின் நெறியாளர் அம்பிகா நெப்போலியன்

முன்றில் – 02 கூடுகையில் பார்வையாளர் உரையில் தியாக இரமேஷ் தன்னுடைய பட்டறிவினைப் பகிர்ந்துகொள்கிறார், என்னவென்று அறிந்துகொள்ள 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு ஜூராங் மேற்கு நூலகத்தில் (பூன்லே எம்.ஆர்.டி அருகில்) நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்.

முன்றில் இரண்டாவது கூடுகையில் எழுத்தாளர் ‘’மலர்விழி இளங்கோவன்’’ எழுதிய ‘’சொல்வதெல்லாம் பெண்மை’’ சிறுகதைத்தொகுப்பைச் ‘’சரஸ் வேல்’’ அறிமுகப்படுத்துகிறார். இந்த நூல் சிங்கப்பூர் நூலகத்தில் கிடைக்கும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நண்பர்கள் சில கதைகளையாவது படித்து வந்தால் நூல் அறிமுகத்திற்குப் பின்பு இக்கதைகள் குறித்து கலந்துரையாடலாம்.

17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு ஜூராங் மேற்கு நூலகத்தில் (பூன்லே எம்.ஆர்.டி அருகில்) நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்.

நன்றி
சொல்லாடும் முன்றில் குழு

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -